Tuesday, December 27, 2011

உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் கணித,வர்த்தக, விஞ்ஞான,கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர்


கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில்  அகில இலங்கை ரீதியில் கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர் விபரங்கள் அறியக்கிடைத்துள்ளது.
இதன் பிரகாரம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவரான கமலக்கண்ணன் கமலவாசன்  தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
வர்த்தகப் பிரிவில் தெபருவௌ தேசிய பாடசாலையின் இசாரா தில்ஹானி கமகே என்ற மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் ருவன் பத்திரன என்ற மாணவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கலைப்பிரிவில் கேகாலை சென் ஜோன்ஸ் மகளிர் வித்தியாலய மாணவி சஜின்தனி சௌசல்யா சேனாநாயக்க முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment