Wednesday, December 21, 2011

திருகோணமலையில் வைத்தியரைக் கடத்தி கப்பம் பெற்ற ஐவர் கைது


திருகோணமலை, வெள்ளை மணல் பகுதியிலுள்ள வைத்தியரை கடத்தி கப்பம் பெற்ற ஐந்து பேரை நேற்று செவ்வாய்க்கிழமை(20.12.2011) குச்சவெளி பொலிஸார் ஹொரவப்பொத்தானை  பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்த முறைப்பாடு தொடர்பாக குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி குணத்திலகவின் உத்தரவுக்கமையவே இச்சந்தேக நபர்களை கை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.தமீம், பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.ஜீ.குணசேகர மேற்கொண்ட நடவடிக்கையின் பொருட்டு இவர்கள் ஐவரும் நேற்று செவ்வாய்கிழமை  ஹொரவப்பொத்தானையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கியொன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் பைசிக்கள் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி குறித்த குழுவினர் நிலாவெளி பகுதியில் இவ்வைத்தியரைக் கடத்தி 10 இலட்சம் ரூபா பணம் கோரி அத்தொகையை நோட் மூலம் எழுதிக் கொண்டு விடுதலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment