
இத்தாழமுக்கம் காரணமாக, மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் எச்சரித்துள்ளது.
இக்காலநிலை மாற்றத்தால் குறித்த கடற்கரை பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அதனால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களில் தொடர்ந்தும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment