Saturday, December 24, 2011

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! - கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் எச்சரித்துள்ளது


வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதோடு, தாழமுக்கம் தற்போது பொத்துவில் நகரிலிருந்து 550 கிலோ மீற்றர் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தாழமுக்கம் காரணமாக, மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் எச்சரித்துள்ளது.
இக்காலநிலை மாற்றத்தால் குறித்த கடற்கரை பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அதனால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களில் தொடர்ந்தும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment