Friday, December 16, 2011

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! மாத்தறையில் சம்பவம்


மாத்தறை,  அக்குரஸ்ஸ - தெதியகல பிரதேசத்தில் ஒருவர் துப்பாக்கியால் சூட்டுக்கு இலக்காகி  பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வீட்டில் இருந்த போது, அவர் மீது இனந்தெரியாத நபர் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தொடர்பில் இதுவரை தகவல் கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment