
இதனையடுத்து இந்த வீசா தளர்வு இந்தோனேசியாவில் அகதிகளின் அதிகரிப்பை தீவிரப்படுத்தும் என்று அந்த நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே, இலங்கையர்கள் உட்பட்டவர்கள் இந்தோனேசியாவை இடைத்தளமாகக்கொண்டே அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இந்தோனேசியாவுக்குள் 10 வீதமான இலங்கையர்களே சட்டப்பூர்வமாக பிரவேசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 வீதமானோர் சட்டரீதியற்ற வகையிலேயே அந்த நாட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையர்கள் உட்பட்ட 2800 பர் தற்போது இந்தோனிசியாவில் அகதிகளாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment