Saturday, December 31, 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஆளும் பங்காளிக் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சு


நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் ஆளும் கட்சியின் அங்கத்துவ கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஈபிடிபி உட்பட்ட கட்சிகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கடந்த வாரத்தில் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டிருந்ததையடுத்தே, ஜனாதிபதி ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் சபை அமர்வுக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆளும் கட்சியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் விருப்பம் கொண்டுள்ளதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன்னார் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கம்யூனிஸக் கட்சியின் சார்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment