Sunday, December 11, 2011

சபாநாயகர் கிண்ணத்திற்காக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சனத் ஜயசூரிய தலைமையிலான எம்.பிக்கள் குழு வெற்றி

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் நாடாளுமன்ற அணி வெற்றியீட்டியுள்ளது.
சபாநாயகர் கிண்ணத்திற்காக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சனத் ஜயசூரிய தலைமையிலான நாடளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றியீட்டியுள்ளது.டொரிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றது.
சுசில் பிரேமஜயந்த தலைமையிலான அமைச்சர்கள் அணி  7 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

No comments:

Post a Comment