
மாளிகாவத்தையைச் சேர்ந்த 30 வயதான மொஹமட் சதாக் மொஹமட் பாஹிம் எனும் நபர் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு கையெழுத்திடச் சென்றபின் மரணமடைந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததோடு மரணம் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு கோட்டை பதில் நீதவான் தீமனி பெத்தேவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மேற்படி பணியகத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கான்ஸ்டபிள் ஒருவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment