
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்காமை, பரீட்சார்த்திக்கு பதிலாக வேறு நபர்கள் பரீட்சைக்குத் தோற்றியமை, விடைத்தாளில் வெவ்வேறு கையெழுத்துக்கள் காணப்பட்டமை போன்ற குற்றங்களின் அடிப்படையில் மாணவ, மாணவியரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை மத்திய நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய மாணவர்களின் பெறுபேறுகளும் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இதில் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமானது என பரீட்சை மேற்பார்வையாளர்களினால் செய்யப்படும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment