வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வந்த இளம்பெண்ணை தொடர்ந்து வந்த இளைஞர் அந்தப் பெண்ணிடம் இருந்த 1 லட்சம் ரூபா பணத்தை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் நேற்று பிற்பகல் யாழ். மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது.
மல்லாகம் சந்தியில் உள்ள வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சைக்கிளில் வந்த இளம்பெண்னைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார்.
குறிப்பிட்ட பெண் ஆட்கள் நடமாட்டம் குறைந்த புகையிரதப் பாதையைக் கடக்க முற்பட்ட சமயம் பார்த்து அந்த இளைஞர் பணத்தினைப் பறித்து தப்பிச்சென்றுள்ளார்.
இது குறித்து பிரஸ்தாப இளம்பெண் செய்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, இதுதொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment