Saturday, February 25, 2012

பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சாரதி, நடத்துனர் மீது சட்ட நடவடிக்கை

news




பிரயாணத்தின் போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு அளெகரியங்களை ஏற்படுத்தும் போக்குவரத்து சபை ஊழியர்கள் குறைத்தளவில் காணப்பட்டாலும்
இவ்வாறு நடந்து கொள்ளும் ஒரு சிலரால் போக்குவரத்துச் சபைக்கு அவப்பெயர் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள போக்குவரத்துச்சபை,

இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாது. பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் சாரதிகள், நடத்துநர்கள் மேல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பாடசாலை மாணவர் ஒருவர் பணம் செலுத்தாமையினால் பஸ்ஸில் இருந்து கீழ் இறக்கி விடப்பட்ட சம்பவம் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பஸ்ஸில் கடமையில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனடியாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment