
தமிழகக் கடற்றொழிலாளர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலைத் தடுப்பதற்கு கச்சத்தீவை மீட்பதே சிறந்த வழி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கிற்கு பதில் மனு ஒன்றை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அம் மனுவிலேயே கச்சதீவை மீட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம் மனுவில், அரசு ஆவணங்களின்படி கச்சத்தீவு தமிழக அரசுக்கே சொந்தமானது எனவும் கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்கு கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
சிறிலங்காவிடம் கச்சத்தீவைக் கொடுத்ததற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படவில்லை. சிறிலங்காவிடமிருந்து கச்சத்தீவை மீட்பது குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த பொதுநல மனு எதிர்வரும் 23ம் திகதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கிற்கு பதில் மனு ஒன்றை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அம் மனுவிலேயே கச்சதீவை மீட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம் மனுவில், அரசு ஆவணங்களின்படி கச்சத்தீவு தமிழக அரசுக்கே சொந்தமானது எனவும் கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்கு கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
சிறிலங்காவிடம் கச்சத்தீவைக் கொடுத்ததற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படவில்லை. சிறிலங்காவிடமிருந்து கச்சத்தீவை மீட்பது குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த பொதுநல மனு எதிர்வரும் 23ம் திகதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment