பாடசாலை மாணவி கடத்தல் தொடர்பாக கொடிகாமம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் தொடர்பாக மாணவியின் தாயாரல் கொடிகாமப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது
யாழ். தென்மராட்சியில் உள்ள கச்சாய் பாடசாலை ஒன்றில் கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவியே கடத்தப்பட்டவராவர்
கொடிகாகம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் தாயார் தெரிவித்த முறைப்பாட்டில், பாடசாலையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்த மாணவியை ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர் எனவும் தனது மகளை மீட்டுத் தரும்படியும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந்த பாடசாலை மாணவியின் கடத்தல் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment