Saturday, February 11, 2012

முல்லைத்தீவு தேர்தல் குறித்து பெவ்ரல் கோரிக்கை

news
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைதுரைப்பற்று பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கோரிக்கை ஒன்றை தேர்தல் ஆணையாளருக்கு முன்வைத்ததாக பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பிரதேச மக்களினுடைய, தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் தமது அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக பெவ்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அநேகமானவர்கள் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் உள்ளனர். அவர்களினதும் வாக்குரிமையை பாதுகாக்கும் நோக்கிலேயே தேர்தல் ஆணையாளரிடம் விசேட கோரிக்கையை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு பகுதிகளிற்கும் தேர்தல் ஆணையாளரின் விசேட காரியாலயங்களை அமைக்க வேண்டும். இத்துடன் பொலிஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய இரண்டு மத்திய நிலையங்களையும் அமைப்பதன் மூலம் இப்பிரதேசங்களில் தேர்தல்களை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment