Saturday, February 18, 2012

கிளி. பூநகரியில் பேருந்து மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞர் வீழ்ந்து சக்கரத்தில் சிக்கி மரணம்


பூநகரியிலிருந்து, வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் மிதிபலகையில் நின்று கொண்டு பயணித்த இளைஞர் ஒருவர் தடுக்கி வீழ்ந்து சில்லில் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
செ.நியூட்வாசன்(வயது24) என்ற இளைஞர் பூநகரி-வவுனியா தனியார் பேருந்தில் வவுனியா நோக்கிப் பயணித்துள்ளார்.
இந்நிலையில் வீதி சீரின்மையினால் பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்து பேருந்தின் பின்பக்க சக்கரத்தினுள் அகப்பட்டுக் கொண்டுள்ளார். இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பூநகரி நாலாம் கட்டை 6ம் குறுக்குத் தெரு பகுதயில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலை நீடித்தது.
எனினும் சம்பவ இடத்திற்கு வந்த பூநகரி பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment