Saturday, February 4, 2012

வறிய மாணவர்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை அனுமதிக்க முடியாது!- சீ.யோகேஸ்வரன் பா.உ


மட்டக்களப்பு கல்குடா வலயத்தில் பல்வேறு அபிவிருத்திகளில் பலர் கரிசனை செலுத்தினாலும், வறிய மாணவர்களின் கல்வி என்பதில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது அனுமதிக்க முடியாத என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு நேற்று, பாடசாலை உபகரணம் வழங்கி வைத்து உரையாற்றும் போதே பா.உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாயக மண்ணில் எதிர் கால வெற்றியின் கிரடம் கல்வி. அதனை அழிக்க எத்தனை சூழ்ச்சிகள் நடந்தாலும் அத்தனையையும் தகத் தெறியும் வல்லமை படைத்தவர்கள் கல்வி கற்கும் மாணவர்கள் என்பதை மனதில் இருத்தி, வறுமை வாட்டினும் கடுமையாக கல்வி பயின்று எம் சமூகத்தின் நிலை தனை உயர்த்திடுவது இன்றைய நிலையில் எமது தேவையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment