Thursday, February 16, 2012

பாடசாலை மாணவி தற்கொலை

news
 மதவாச்சி - தம்மென்னாவ பகுதியில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் தனது பாடசாலை கழுத்துப் பட்டியை பயன்படுத்தி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செவ்வந்தி சசனிக்கா எனப்படும் 15 வயதுடைய சிறுமியே தற்கொலை செய்து கொண்டவராவார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.மதவாச்சி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
இதேவேளை அனுராதபுரம் நாத்தண்டிய பிரதேசத்தில் ரயில் மோதி 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற ரயிலிலேயே மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

No comments:

Post a Comment