Friday, February 3, 2012

நாவாந்துறை மனித உரிமை மீறல் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

news
யாழ். நாவாந்துறையில் இடம்பெற்ற கிறீஸ் பூதம் தொடர்பான பதற்ற நிலையைத் தொடர்ந்து படையினராலும் காவற்றுறையினராலும் அப்பகுதி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் நடவடிக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 23ம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் நீதியரசர்களான என்.ஜி. அமரதுங்க, கே. ஸ்ரீபவன் ஆகியோர்  இத்தீர்ப்பை அறிவித்தனர்.

31 மனுதாரர்கள் சார்பில் கே. கனக ஈஸ்வரன், சாந்தா அபிமானசிங்கம், எம்.ஏ.சுமந்திரன், விரான் கொரையா,பவானி பொன்சேகா, எல். ஜெயகுமார், ஆர்.கே. குருபரன் ஆகியோர் எம்.எம்.எம். சம்சுதீனின் நெறிப்படுத்தலில் ஆஜராகினர்.

11 மனுதாரர்கள் சார்பாக கே.எஸ்.ரத்னவேல் ஆஜரானார். 8 மனுதார்கள் சார்பாக பி.என். தம்பு ஆஜரானார். 6 மனுதார்கள் சார்பாக புவிதரன் ஆஜரானார். ஏனைய மனுதாரர்கள் சார்பாக புலஸ்தி ஹேவமான்ன பசிந்து சில்வா சன்ஜீவ ரணவீர ஆகியோர் ஆஜராகினர்.

இருதயநாதன் வீனஸ் றெஜி என்பவர் தனது மனுவில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் பெண் பொலிஸ் அதிகாரி நதீகா சட்ட மா அதிபர் உட்பட 12 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment