Sunday, February 12, 2012

யாழிலிருந்து உறவினர் திருமணத்திற்காக கண்டி சென்ற இளைஞன் சடலமாக மீட்பு


உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்கு சென்ற இளைஞன் ஒருவர் நேற்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த தர்மலிங்கம் சிவாதரன் என்ற 24 வயது இளைஞனே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன் இளைஞன் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறுதலாக கிணற்றில் விழுந்தாரா? என்பது குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment