Monday, February 6, 2012

கடத்தப்பட்டு விடுதலையான யாழ் அல்லைப்பிட்டி மாணவன்


யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் இனந்தெரியாத நபர்களினால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்டு 4ம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த எஸ். றொசான் என்ற 13 வயதுடைய மாணவனே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

மேற்குறித்த மாணவன், கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்டிருப்பதாகவும், சுதந்திர தினம் சனிக்கிழமை அன்று அம்மாணவன் அழுதபடியே வீடு வந்து சேர்ந்ததாகவும்,  தற்போது அந்த மாணவன் பயந்த நிலையில் இருப்பதால் இக்கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடியாதுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்று விட்டு கடந்த ஆண்டே இவர் சொந்த ஊரான அல்லைப்பிட்டிக்கு திரும்பியிருந்ததாக இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இருந்தும் இந்த மாணவனை என்ன நோக்கத்துக்காக கடத்தப்பட்டார் என்ற விபரம் இதுவரை வெளிவரவில்லை.

No comments:

Post a Comment