Thursday, February 16, 2012

எரிபொருள் விலையேற்றத்தால் வாடகை வாகனங்களிற்குரிய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது ; பொதுமக்கள் பாடு இனி திண்டாட்டம் தான்

news
 எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து முச்சக்கர வண்டிகள், வாடகை வாகனங்கள் மற்றும் ஏனைய போக்குவரத்து வாகனங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முக்கியமாகநாட்டிலுள்ள பெருநகரப் பகுதிகளிலேயே இந்த நிலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும், பேருந்துகளை பயன்படுத்தாமல், வாடகை வாகனங்களில் அலுவலகம் உள்ளிட்ட தேவைகளுக்கு செல்பவர்களின் நிலை தற்போது கவலைகிடமாக உள்ளது.
அத்தோடு மீட்டர் டக்ஸி வாகனங்களும் தமது கட்டணங்களை அதிகரித்துள்ளன.இதுவரை, முதல் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபாவும், பின்னர் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 30 ரூபா என்ற அளவில் கட்டணம் அறவிடப்பட்டு வந்தது.தற்போது 30 ரூபா கட்டணம் 32 ரூபாமுதல், 35 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கன்டர், லொறிகள், இழுவை வாகனங்கள் போன்றவற்றின் கட்டணங்களும் வெகுவாக அதிகரித்துள்ளன.  

No comments:

Post a Comment