Saturday, February 4, 2012

1.5 கிலோ ஹெரோயினுடன் வெளிநாட்டுப் பெண் கைது

டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ 475 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த தாய்லாந்து நாட்டுப் பெண் ஒருவரே போதைப்பொருட்களுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்ட சொக்கலேட்டுக்களுடன் ஹெரோயின் எடுத்துவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment