Monday, February 13, 2012

நாடு முழுவதிலும் போக்குவரத்து ஸ்தம்பிதம்


எரிபொருள் விலையேற்றத்தினை ஆட்சேபித்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போரட்டம் தற்போதைய நிலைவரையில் வெற்றியளித்துள்ளது.
பெரும்பாலும் நாட்டின் சகல பாகங்களுக்குமான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரச பேரூந்து மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை விட மன்னார், கண்டி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கொழும்பு ஆகிய இடங்களில் இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
வடபகுதியான யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட மீனவர்கள் தாங்கள் தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து செயற்படத் தயார் என்று அறிவித்துள்ளனர்.
இதனிடையே, எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக இலங்கை பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கை தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் தீர்வு இதுவரையிலும் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த தனியார் பேரூந்துகளின் பணிப் புறக்கணிப்பு காரமாக நாட்டின் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தென்னிலங்கை மீனவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தாமும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விலையேற்றம் காரணமாக தமது தொழிலுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment