Monday, February 13, 2012

தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்திய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது


இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களினால் நடத்தப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
எரிபொருளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் அல்லது கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரியிருந்தனர்.
அரசாங்கத்திற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, பஸ் கட்டணங்கள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்திய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதிலும் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் 17 வீத கட்டண அதிகரிப்பை கோரியதாகவும் அரசாங்கம் 20 வீத கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment