Monday, February 6, 2012

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைத்த மகிந்த


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் செய்து அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக்கட்டத்தையும் திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டத்தில் உள்ள வார்டுக்கு அனுமதிக்கப்படவுள்ள முதலாவது நோயாளியின் விபரத்தை  ஏட்டில் ஜனாதிபதி பதிவு செய்தார்.
அதன் பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.
இந்த வைபவத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மஹிந்த யாழ் மத்திய கல்லூரிக்கும் சென்று அங்கும் உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment