Saturday, February 18, 2012

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்; இன்றும் மூவர் உயிரிழப்பு

news
இன்று காலை ஹபரனை - கந்தளாய் பிரதான வீதியின் கிதுல்உதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிறிதொரு விபத்துச் சம்பவம் ஒன்று புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு லொறிகளே  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டு பிரதேசத்திலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது இவ் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவங்கள் தொடர்பாக விசாரனைகள் இடம் பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துச் செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு அதிகரித்த வேகமும் சாரதிகளின் கவனயீனமுமே காரணம் என குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment