Thursday, February 9, 2012

கல்பிட்டியில் ஐந்து மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு


கல்பிட்டியில் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
1180 கிராம் எடையுடைய போதைப் பொருட்களை மீட்டுள்ளதாகவும் , போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment