Saturday, February 25, 2012

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது!- கடற்படைக் கட்டளைத் தளபதி


கச்சதீவு இலங்கைக்கு சொத்தமானது என்பதனை நிரூபிக்க எழுத்து மூல ஆவணங்கள் காணப்படுவதாக வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரவி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கச்சதீவை மீளவும் இந்தியா பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் விடுத்து வரும் கோரிக்கைக்கை அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான எழுத்து மூலமான ஆதாரங்கள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு தேவாலயம் யாழ்ப்பாண பேராயரினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றமை மூலம் இது மேலும் உறுதியாகின்றது. கச்சதீவு இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment