Saturday, February 4, 2012

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கே உண்டு : தேசியதின உரையில் மஹிந்த ராஜபக்ஷ


இலங்கையில் 50 வருடங்களாக கிடைக்காத சுதந்திரத்தை மூன்று வருடங்களி;ல் பெற்றுக்கொடுத்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 64 வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலை அநுரதப்புரத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையின் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளே காரணம் என்று குற்றம் சுமத்தினார்.
அந்த பிரிவினைவாதிகளிடம் இருந்தே இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு நீரும், எண்ணெய்யும் கிடைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை நாட்டின் குறிப்பிட்ட பிரதேசம் ஒரு இனத்திற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இலங்கை நாடு அனைத்து இனத்திற்கும் சொந்தமானது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
இலங்கையின் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளின் தீர்வு திட்டங்கள் தேவையில்லை. வெளிநாட்டு தீர்வு ஒன்று இலங்கையில் திணிக்கப்படுமானால் அது, ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும். இதனை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு. இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிகளின் பாரிய பொறுப்பாகும் என மஹிந்த ராஐபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment