Wednesday, March 14, 2012

தெல்லிப்பளை பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து வெடி குண்டுகள் மீட்பு

news
 வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பகுதியில் பாழடைந்த  கிணற்றிலிருந்து இருந்து பெருமளவிலான கைக்குண்டுகள்  மீட்கப்பட்டுள்ளது.
 
தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு பின்னால் உள்ள,பொதுமக்களுக்கு சொந்தமான காணியொன்றின் கிணற்றினை  துப்பரவு செய்யும் பணியின் போதே இக் கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டிருந்தன.கடந்தகால யுத்ததத்தின் பின் தற்போதே இப்பகுதியில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
பொது மக்களின் பாவனைக்காக விடப்பட்டிருக்கும் குறித்த கிணறு சந்தேகத்திற்கிடமான வகையினில் காணப்பட் டதையடுத்து பொது மக்களினால் துப்பரவு செய்யும் போதே பத்திற்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
 
இன்னும் மேலதிகமான வெடிபொருட்கள் கிணற்றினுள் காணப்படலாமென மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. 
 
மேலதிக அகழ்வு பணி தற்போது மிகவும் தாமதமாகவே நடந்து வருகின்றதாகவும்,இராணுவத்தினரின் மேற்பார்வையி னில் தற்போது கண்ணி வெடி அகற்றல் பணிகள் ஆரம்பமாகியுள்ளதெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  அண்மையில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட இப்பகுதி கிணறொன்றினுள் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் 
கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்தே மூழ்கடிக்கப்பட்ட கிணறுகளை துப்புரவு செய்யும் பணியினில் மக்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
 
குறித்த பகுதிகளில் கண்ணி வெடி அகற்றல் பணிகள் பூரணப்படுத்தப்பட்டு விட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறி வந்ததுடன்  மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment