Wednesday, March 14, 2012

புதிய நடைமுறைகளை கண்டித்து யாழ். பல்கலையில் வகுப்புப் புறக்கணிப்பு

news
யாழ். பல்கலைக்கழகத்தில் புகுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகளை கண்டித்து இன்று காலை கலைப்பீட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 2ம் வருட மாணவர்களுக்கான சிறப்புக்கலை தெரிவில், இவ்வாண்டு புதிதாக புகுத்தப்பட்டுள்ள சில நடைமுறைகளைக் கண்டித்தே இந்த வகுப்புப் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

கடந்தவருடம் மட்டுப்பாடுகள் எதுவுமின்றி மாணவர்கள் சிறப்புக்கலை பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவ்வாண்டு மாணவர்கள் அடைந்திருக்கவேண்டிய GPA அளவு அதிகரிக்கப்பட்டமையும் எவ்வளவு மாணவர் தகுதி பெற்றிருப்பினும், 40 மாணவர்களே சிறப்புக்கலை பயில அனுமதிக்கப்படுவர் எனப் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய கவனம் எடுக்கக் கோரி கடந்த வாரம் துணைவேந்தருக்கு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டபோதும் இதுவரை எதுவிதமான பதிலும் வழங்கப்படவில்லை. என மாணவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே இப் பிரச்சினையில் தலையிட்டு நிரந்தரமான முடிவை உடனடியாக பல்கலை நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்ககப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment