
யாழ் குடா நாட்டிலிருந்து ஏனைய தீவுகளுக்குச் செல்லவும் இந்த படகுச் சேவை பெரிதும் பயனளிக்கின்றது. யுத்தத்தை எதிர்கொண்டு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த காலத்தில் விசேடமாக வட பகுதி மக்களுக்கு பயன்மிக்கதொரு சேவையை இந்த படகுச் சேவை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த பயணிகள் படகுச் சேவையை இயக்குகின்ற படகு செயற்பாட்டாளரான தமிழ் இளைஞன் மீது பௌத்த பிக்கு மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்துகொண்டேன்.
இந்த தாக்குதலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களின் பிரயாணங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த படகு ஊழியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
எந்த தனிப்பட்ட கோபம் இருப்பினும் அதற்காக சட்டத்தைக் கையில் எடுப்பது பிழை. இந்த அதிர்ச்சியான சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தத் தாக்குதலை நடத்திய நபரை சட்டத்துக்கு முன்னால் நிறுத்துவது பொலிஸாரது கடமையாகும். இவ்வாறான சம்பவங்களால் நெருக்கடிகளை எதிர்கொள்வது தமிழ் மக்களே என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment