Friday, March 9, 2012

முல்லையில் 51 வீதமான வாக்காளர்களுக்கு அடையாள அட்டை இல்லை; தேர்தல் திணைக்களம்

news
புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய பிரதேச சபைத் தேர்தல் 24ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் 51 வீதமான வாக்காளர்கள் அடையாள அட்டைகள் இல்லாமல் இருப்பதாக தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்களை கொண்டு செல்வது கட்டாயம் என தேர்தல் திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தேசிய அடயாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை மார்ச் 17ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிக்க தேசிய அடையாள அட்டை இல்லாவிடின் தங்களது கிராம சேவகரை சந்தித்து தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முயற்சிக்குமாறு  பெப்ரல் அமைப்பு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment