Saturday, March 10, 2012

இளம் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை; முல்லைத்தீவில் பயங்கரம்

news
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மிகக் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி மகேந்திரன் (வயது 32) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் நேற்றுமுன்தினம் இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
 
சுதந்திரபுரம் காளி கோயிலடியில் இந்தக் குடும்பஸ்தர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஓட்டோ ஒன்றில் வந்த உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரரான ஒருவரே இந்தக் குடும்பஸ்தரை வாளால் வெட்டியதாகப் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
வாளால் வெட்டியவர் ஒரு பூசாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள் வெட்டில் படுகாயமடைந்த இவர் தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடைவெளியில் உயிரிளந்துள்ளதாகக் கூறப்பட்டது. அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
 
முல்லைத்தீவுப் பொலிஸாரின் தகவலை அடுத்து கிளிநொச்சி மாவட்டப் பதில் நீதிவான் எஸ்.விஜயராணி சடலத்தைப் பார்வையிட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
 
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மைத்துனராக ஆலயப் பூசகர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment