அடுத்து வரும் ஒரு வருட காலப் பகுதிக்குள் பேருந்துக் கட்டண உயர்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நேற்று பாரளுமன்றத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பேருந்துக் கட்டணங்கள் இருபது சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் அது பொது மக்களைப் பாதிக்கவில்லை. பொது மக்கள் இரு மடங்கு கட்டணத்தை கொண்டிருக்கும் சொகுசு பேருந்து வண்டிகளில் பயணிப்பதற்கு முண்டியடிப்பது இதற்குச் சிறந்த உதாரணமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்,
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து பஸ் கட்டணமும் இருபது சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்கு எதுவித கட்டண உயர்வையும் மேற்கொள்ள கோரமாட்டோம் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் எமக்கு உறுதியளித்துள்ளனர்.
அந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்பவே இக்கட்டண உயர்வுக்கு இடமளிக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் ஜுலை மாதம் வருடாந்த பேருந்துக் கட்டண உயர்வு அதிகரிக்கப்படமாட்டாது. அதற்கும் சேர்த்தே தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று பாரளுமன்றத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பேருந்துக் கட்டணங்கள் இருபது சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் அது பொது மக்களைப் பாதிக்கவில்லை. பொது மக்கள் இரு மடங்கு கட்டணத்தை கொண்டிருக்கும் சொகுசு பேருந்து வண்டிகளில் பயணிப்பதற்கு முண்டியடிப்பது இதற்குச் சிறந்த உதாரணமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்,
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து பஸ் கட்டணமும் இருபது சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்கு எதுவித கட்டண உயர்வையும் மேற்கொள்ள கோரமாட்டோம் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் எமக்கு உறுதியளித்துள்ளனர்.
அந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்பவே இக்கட்டண உயர்வுக்கு இடமளிக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் ஜுலை மாதம் வருடாந்த பேருந்துக் கட்டண உயர்வு அதிகரிக்கப்படமாட்டாது. அதற்கும் சேர்த்தே தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment