
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று மாலை 1.30மணியளவில் கிளிநொச்சி நகரிலிருந்து லொறியும், குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளிலும் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் வீதி புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், லொறியை முன்னால் விட்டு தான் பின்னால் வருவதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளின் ஒரு பக்க கைபிடி லொறியுடன் மோதியுள்ளது.
இதனையடுத்து, குறித்த இளைஞர் நிலைதடுமாறி லொறியின் பின்புறச் சக்கரத்திற்குள் வீழ்ந்துள்ளார். இதனால் சக்கரம் இளைஞர் மீதேறி சம்பவ இடத்திலேயே, முரசுமோட்டையை சேர்ந்த பத்மசிங்கம் லதீபன் (வயது22) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வீதி புனரமைப்புச் செய்யப்படும் இடங்களில் முறையான போக்குவரத்து ஓழுங்குகள் இன்மையே விபத்திற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment