
யாழில் அமைந்துள்ள மகளிர் கல்லூரியொன்றில் தரம் 8இல் கல்வி பயிலும் மாணவியான சுதன் திஸ்ஷா (வயது 14) என்ற மாணவியே காணாமல் போயுள்ளதாக, இன்று வெள்ளிக்கிழமை குறித்த மாணவியின் பெற்றோர் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மாணவி வழமை போல நேற்றுக் காலை பாடசாலைக்கு சென்றார் எனவும் இன்று வரை அவர் வீட்டுக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில்
பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை எனவும் குறித்த மாணவியின் பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலை மாணவி காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய நிலையத்திலும் இன்று முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment