
நேற்றைய தினம் நடைபெற்ற வேலணை பிரதேச சபையின் ஒருங்கிணைப்பு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பேராட்டக்காலங்களில் மண்டைத்தீவு அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகவும் தமக்கு மின்சாரத்தை விரைவாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது அமைப்பினர் நேற்றைய கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த அத்தியட்சகர், தற்போது மின்சார சபை மிகவும் பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாக தள்ளப்பட்டுள்ளதாகவும் யாராவது முன்வந்து நிதி பங்களிப்பை வழங்கினால் மின்சாரம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதனால் கொதிப்படைந்த பொது அமைப்பினர் ஏற்கனவே நாட்டப்பட்ட 9 மின்கம்பங்களையும் பிடுங்கிக்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, மண்டைத்தீவுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment