Thursday, April 5, 2012

சுன்னாகம் பஸ் நிலைய புனரமைப்பிற்காக 10 மில்லியன்


சுன்னாகம் பஸ் நிலையம் புதிய கட்டடித்தை நிர்மாணிப்பதற்கு அரசிடம் இருந்து சுமார் பத்து மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வலி தெற்கு உடுவில் பிரதேச சபைத் தலைவர் திருமதி சுலோசனா மருகநேசன் தெரிவித்தார்.
சுன்னாகம் நகரப் பகுதயில் அமைந்துள்ள பஸ் நிலையம் கடந்த பல வருடங்களாக பல குறைபாடுகளின் மத்தியில் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் பஸ் நிலையத்தை திருத்தி புதிய கட்டிடம் அமைப்பதற்க்கு நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்நிதியின் மூலம் விரைவில் இக்கட்டிடப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment