
இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.பருத்தித்துறை வீதியில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவரும்- இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த உடுவில் அம்பலவாணர் வீதிப் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜெயந்தன் (வயது 40) ஆகியோருமே காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு- மேலதிக விசாரணைகளை யாழ்.போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment